சோழர்களின் சிவ புராண சுதை ஓவியம் – ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

May 25, 2025 ppurush@gmail.com 0

தென்புற சுவரில் தட்சிணாமூர்த்தி ஓங்கி வளர்ந்த விருட்சத்தின் கீழே தவநெறி கமழ சீடர்களுக்கு (சனாதன முனிவர்களுக்கு) ஞானமொழி அருளும் காட்சி, இயற்கையின் சாயல் நிரம்பிய சூழல். மேற்குபுறச் சுவரில் திருவிளையாடல் காட்சி, வலது கோடியில் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் கயிலாயம் செல்லும் போது, முன்னே சேரன்மான் நாயனார் குதிரை மீது அமர்ந்து சுந்தரமூர்த்தி நாயனாரை பார்த்தபடி செல்ல யானைக்கு முன் செல்லும் குதிரை, பயந்த படியே  வேகமாக நடக்கிறது